Monday 20 January 2014

முடிந்தால் கைது செய்யுங்கள் – ராவண பலயவுக்கு மன்னார் ஆயர் சவால்!

Monday, January 20, 2014
முடிந்தால் தம்மைக் கைது செய்யுமாறு ராவண பலயவுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை சவால் விடுத்துள்ளார்.
 
போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட, போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்பிடம், மன்னார், யாழ். ஆயர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
இதற்கு இராவண பலய அமைப்பு, மன்னார், யாழ். ஆயர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூறியிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மன்னார் ஆயர்,
 
பொய்யான போர்க்குற்றச்சாட்டுகளை நாம் சுமத்தவில்லை.
இது பொய்யான குற்றச்சாட்டு என்றால், வேறெதையும் பேச முன்னர், ராவண பலய முதலில் அதை நிரூபிக்கட்டும்.
 
போரின் இறுதிக்கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே, நாம் இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறோம்.
அவர்களால் பொய் சொல்ல முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment