Sunday 27 April 2014

புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சி: நெடியவனுக்கு சிவப்பு எச்சரிக்கை! - இணையத்தில் வெளியிட்டது இன்டர்போல்!

Sunday, April 27, 2014
நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கை விதித்துள்ளது. இலங்கையில்  புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன் மீது குற்றம் சுமத்தியுள்ளது. 

நெடியவனை கைது செய்வதற்கான உதவியை சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளதாக இலங்கை பொலிஸார் இம்மாத ஆரம்ப பகுதியில் அறிவித்திருந்தனர். இதற்கமைய நெடியவனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

நெடியவன் தொடர்பிலான சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் நெடியவனது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday 1 April 2014

புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பு!

Tuesday, April 01, 2014
இலங்கை::புலிகளுடன் தொடரப்புடையவை எனத் தெரிவித்து குறைந்த பட்சம் பதினைந்து சர்வதேச அமைப்புக்களைப் பட்டியலிட்டு தடை செய்து இலங்கை அரசு வர்த்தமானியில் அறிவித்திருக்கின்றது

புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று பட்டியல்படுத்தி தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேரணை வெற்றிபெற்ற நிலையில்,  இந்த தீவிர நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்தப் பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.
இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும்
புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;, கத்தோலிக்க அருட்தந்தை. இமானுவேலின் உலகத் தமிழர் பேரவை, நெடியவனின் புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்;கும்.
இந்த முழு விபரங்கள அடங்கிய  அறிவிப்பு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசினால் இந்த வாரம் வெளியிடப்படும் என தெரிய வருகிறது.

புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன. இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.
முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:

1.    நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2.    கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3.    விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4.  விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடைசெய்யப்படவுள்ள அமைப்புக்கள்.
1. தமிழீழ விடுதலை புலிகள் LTTE
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் .
3. தமிழர் ஒருங்கிணைப்பு குழு
4. பிரித்தானிய தமிழர் பேரவை - BTF
5. உலக தமிழர் இயக்கம்
6. கனேடிய தழிழ் காங்கிரஸ்
7. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
8. உலக தமிழ் மன்றம்
9. கனேடிய தமிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தமிழ் பேரவை
11. தமிழ் இளைஞர் அமைப்பு
12. உலக தமிழர் ஒருங்கமைப்பு குழு
13. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14. தமிழீழ மக்கள் கூட்டம்
15. உலக தமிழ் நிவாரண நிதியம்
16. தலைமை காரியாலய குழு
ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.
 
Thak you - Courtesy : poonththalir.blogspot.com

வீட்டுத்தொகுதிகளின் நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரினால் மேற்பார்வை!

 Tuesday, April 01, 2014
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (மார்.28) கொழும்பு பிரதேசத்தில் நிறைவுறும் தறுவாயிலுள்ள வீட்டுத் தொகுதியின் பணிகளை மேற்பார்வை செய்தார்.

இம் மேற்பார்வை விஜயத்தின் போது எதிரிசிங்க மாவத, சிரில் சீ பெரேரா மாவத மற்றும் போகஸன் வீதி வீடமைப்புத் திட்டங்களை செயலாளர் மேற்பார்வை செய்தார்.

இவ்வீட்டுத் திட்டமானது பாதுகாப்பு செயலாளரின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டலின் கீழும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வீட்டுத் திட்டமானது குறைந்த வசதிகளுடன் வாழும் சேரிப்புற மக்களுக்கு வழங்கப்படுவதோடு கொழும்பை சேறிப்புறமற்ற நகரமாக மாற்றும் அரசின் வாக்குறுதிக்கமைய இவை முன்னெடுத்துச் செல்லப்படுவது சிறப்பம்சமாகும்.

தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவளிக்கத் தயாரில்லை - ஃபொன்சேகா!

Tuesday, April 01, 2014
 பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மிகவும் பொருத்தமான ஒருவரை தேர்தலில் போட்டியிடச் செய்ய எதிர்க்கட்சிகள் முனைப்பு எடுத்தால், ஜனநாயகக் கட்சி முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவளிக்கத் தயாரில்லை எனவும் அவர், பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்தலில் ஈட்டியுள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Monday 24 March 2014

சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் இலங்கையை புரிந்து கொண்டுள்ளனர்

Monday, March 24, 2014
சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் இலங்கையை புரிந்து கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே இலங்கை அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் சமரசிங்க, ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நாடு அடைந்துள்ள அபிவிருத்திகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு வெற்றிகரமாக விளக்கம் அளிக்க முடிந்துள்ளமையே இந்த பிளவிற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநேகமான நாடுகள் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் - ஜனாதிபதி!

Monday, March 24, 2014
 மாகாணசபைத் தோதல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 29ம் திகதி மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு நாட்டின் வாக்காளர்கள் பதிலடி கொடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியை அமோக வெற்றியடையச் செய்வதன் மூலம், சர்வதேச சமூகத்திற்கு வலுவான ஓர் செய்தியை சொல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஆதரவு யாருக்கு காணப்படுகின்றது என்பதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரானதல்ல எனவும், பயங்கரவாதிகளுக்கு எதிரானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் மூலம்; ஈட்ட முடியாத வெற்றியை சர்வதேச சமூகத்தின் ஊடாக ஈட்டிக்கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Sunday 23 March 2014

யஸ்மின் சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம!

Sunday, March 23, 2014
தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின்  சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை எந்தளவானது என்பதை புடம்போட்டு காட்டுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தோனேசியாவின் தருஸ்மான் தலைமையிலான நிபுணத்துவ குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.
இந்தக் குழுவில் சட்டத்தரணி யஷ்மின் சூகாவும் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் பிரித்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த அறிக்கை பக்கச்சார்பானது என்றும், இதில் நேர்மையான தரவுகள் காண்பிக்கப்படவில்லை என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
எனவே இதேபோன்றுதான் தருஸ்மான் அறிக்கையும் நேர்மையற்றதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Saturday 22 March 2014

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை வருத்தமளிக்கின்றது: அமெரிக்கா!

Saturday, March 22, 2014
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சொந்த நாட்டின் தைரியமான பிரஜைகளுக்கு எதிராக தண்டனை விதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்கும் சொந்தப் பிரஜைகள் ஒடுக்கப்படுகின்ற வகையிலான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அழுத்தங்கள் உக்கிரமடைந்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜேன் பாஸ்கீ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதனிடம் மு.கா. கையளித்த அறிக்கையில் யுத்த கால இழப்புகளும் உள்ளடங்கியுள்ளன!

Saturday, March 22, 2014
இந்த நாட்டில் தேர்தல் திணைக்களத்தால் பதியப்பட்ட 42 அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் முஸ்லீம் என்ற வசனத்தினை பிரதிபலிக்கின்ற ஒரே ஒரு கட்சி முஸ்லீம் காங்கரிஸ் கட்சி மட்டுமே என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெஹிவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஆனால் சிலர் முஸ்லீம் காங்கிரஸ் ஊடாக வந்து அக் கட்சியில் இருந்து விலகி அஸ்ரப் காங்கிரஸ, தேசிய முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், கிழக்கு முஸ்லீம் காங்கிரஸ் என பல கட்சிகள் தோற்றுவித்தார்கள். எனினும் முஸ்லீம் என்ற பதத்தை வைத்திருந்தால் நாம் இனவாதி எனக் காட்டப்படுவோம என பயந்து முஸ்லீம் என்ற பதத்தையே நீக்கிவிட்டார்கள்.

முஸ்லீம் என்று கட்சியை சொல்வதற்கே கூச்சப்படுபவர்கள் எவ்வாறு இந்த நாட்டின் வாழும் முஸ்லீம்களின் பிரச்சினையைகளைப் பேசப்போகின்றார்கள்? இவ்வாறானவர்கள் எவ்வாறு முஸ்லீம்களிடம் போய் வாக்கு கேட்க முடியும்.

வட கிழக்கில் இருந்த ஆயுதக்குழுக்களிடமிருந்த ஆயுதங்கள் அப்போதைய காலத்தில் முஸ்லீம் ;இளைஞர்களையும் கவர்ச்சி காட்டியது. அதனால் அன்று முஸ்லீம் வாலிபர்களும் அவ் இயங்கங்களில் சேருவதற்கு ஆர்வங்காட்டினார்கள். ஒரு சில இளைஞர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.

அந்த தருனத்தில்தான் மறைந்த தலைவர் எம். எச்.எம் அஸ்ரப் அவர்கள் முஸ்லீம் இளைஞர்களை வழிமறித்து இந்த முஸ்லீம் போராட்ட இயக்கத்தினை ஆரம்பித்து அவர்களை ஒன்று திரட்டினார்.

வட கிழக்கில் முஸ்லீம்களுக்கு நடைபெற்ற அநீதிகள், யுத்தம் முடிவடைந்த பிறகு அதிதீவிர போக்குடைய பௌத்த குழுக்களின் தாக்குதல் கொண்ட அறிக்கையை நவநீதம் பிள்ளையிடம் கையளிக்கச் சென்றபோது நவநீதம் பிள்ளையின் கொழும்பில் உள்ள ஜ.நாடுகள் ஏற்பாட்டாளர்கள் அரசில் இருக்கும் யாரையும் சந்திக்க முடியாது- அதற்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது- நீங்கள் சந்திப்பதென்றால் அரசின் அனுமதி பெற்று வாருங்கள் எனத் தெரிவித்தனர்.

ஆனாலும் நவநீதம் பிள்ளை பயணிக்க 1 மணித்தியாலம் முன் அவரைச் சந்தித்து இந்த அறிக்கையை மட்டும் நான் கையளிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள ஜ.நா. இலங்கைக்கான பணிப்பாளரிடம் அவகாசம் கேட்டேன். அதன் பின்னரே இந்த அறிக்கையை நவநீதம்பிள்ளையை சந்தித்து கையளித்தேன்.

அவர் அதனை மேலோட்டமாக வாசித்து விட்டு உரிய நடவடக்கை எடுப்பதாக அந்த அறிக்கையை அவர் எடுத்துச் சென்றார்.

அந்த அறிக்கையில் வட கிழக்கு யுத்த காலத்தில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட சகல சம்பவங்களும் அடங்கப் பெற்றுளளன. அதில் ஹஜ்ஜூக்கு சென்று காணமல் போனவர்கள் தொட்டு காத்தான்குடி, ஏறாவுர், வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றம் என பல தகவல் அதில் அடங்குகின்றன.
யுத்தத்திற்குப் பிறகு இந்த அரசின் நடவடிக்கையினால் அதிலும் அம்பாறை மாவட்டத்திலும் மட்டும் முஸ்லீம்களுக்குரிய காணி 35ஆயிரம் ஏக்கர் காணியை இழந்துள்ளோம்.

இதே போன்று அம்பாறை, திருமலை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லீம்களுடைய இருப்புகள் யுத்தத்தின் பின்பும் முன்பும் அபகரிக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள காட்டுவள திணைக்களம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்,விவசாய முதலீட்டு, பௌத்த ஆராச்சி என பல்வேறு திணைக்களங்கள் ஒன்று சேர்ந்து அம்பாறை மாவட்டத்தில் காணிகளை அபகரித்துள்ளன.

இதனை அரசுடன் பேசினாலும் அதிகாரிகள் அரச திணைக்களங்கள் ஊடாக முஸ்லீம்களது காணிகள் அபகரிக்கப்பு தொடரவே செய்கிறது” என ஹசன் அலி தெரிவித்தார்.

Thursday 6 March 2014

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: தேர்வாளர்கள் பட்டியலில் புதின் மற்றும் ஸ்நோடெனின் பெயர்கள் இடம்பிடித்தது!

Thursday, March 06, 2014
 இந்த ஆண்டின் அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசுக்கான தேர்வாளர்கள் பட்டியலில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது என்று நார்வே மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த நோபல் பரிசு கமிட்டி நேற்று குறிப்பிட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் ரகசியத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்நோடென், பாகிஸ்தானின் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போன்றோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டுதோறும் இந்த தேர்வு பட்டியலில் இடம்பெறுவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது நோபல் பரிசின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள ஆர்வத்தைக் குறிப்பிடுவதாக, நோபல் நிறுவனத்தின் தலைவரான கிர் லுண்டேஸ்டட் கூறினார். தங்களின் கமிட்டி தேர்வாளர்கள் பட்டியலை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்படுவோரின் பெயர்களை ஆஸ்லோவில் வரும் அக்டோபர் 10ம் தேதியன்று அறிவிக்க இருப்பதாக அவர் கூறினார். இவ்வாறு தேர்வு பெறுபவர்களின் பெயர்கள் முன்கூட்டி அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

வழக்கம்போல தேர்வாளர்களின் விபரங்களை அறிவிக்க மறுத்த அவர், அமைதி விருதுக்கு வந்திருக்கும் 278 தேர்வாளர்களில் 47 நிறுவனங்களின் பெயர்களும் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுவாக இந்த தேர்வாளர்கள் பட்டியல் 50 வருடங்களுக்கு ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
தேர்வுக் கமிட்டியின் முதல் சுற்றில்கூட பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படக்கூடும். ஆனால், இதுமட்டுமே கமிட்டியின் ஒப்புதலுக்கான அறிகுறி ஆகாது என்று இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமல் அந்நாட்டின் ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டின்கீழ் அழிக்க முயற்சி மேற்கொண்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் அமைதிக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், தற்போது உக்ரைனின் கிரிமியா பகுதியில் ரஷ்யா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சிகள், புதினுக்கு இந்த விருது கிடைப்பதற்கு எதிரானதாக அமையக்கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன.