Saturday 18 January 2014

அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்!

sss1713Saturday, January 18, 2014

அமைச்சர் ஜி . எல் . பீரிஸ் , வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

 
அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் , 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று சென் . அந்தனிஸ் மைதானம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது .

இது  இலங்கை அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில் , அதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது .

 எனினும் அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார் .

இந்தநிலையிலேயே , இது நியாயமற்றது என்றும் , சோடிக்கப்பட்ட , நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டு என்றும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் இதுகுறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க முடிவு செய்துள்ளது .

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி . எல் . பிரீஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து அமெரிக்காவின் இந்த நியாயமற்ற கருத்து தொடர்பாக முறையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன . 

No comments:

Post a Comment