Sunday 19 January 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!

Sunday, January 19, 2014
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த வாரத்தில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசரமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று, ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுலாக்கம், மனித உரிமைப் பேரவை அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது, எதிர்வரும் மாதமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,

No comments:

Post a Comment