யாழில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தம்பிராசா மீது இனந்தெரியாதோர்கள் நேற்று அதிகாலை கழிவு ஒயில் வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்குமாறு வலியுறுத்தி, அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவருமான தம்பிராசா உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.
கடந்த வியாழன் முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் வீசித் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து யாழ். பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், சம்வவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment