23 January 2014
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வடக்கில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை கண்டறிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஆராயும் பணிகள் செவ்வாய்க் கிழமை நிறைவடைந்தது.
கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்பணியில் காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் விசாரணைகள் இடம்பெறும் விதம் தொடர்பாக நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பராக்கிரம பரனகம கருத்துத் தெரிவிக்கையில்.
“சுமார் 152 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே முறைப்பாடுகள் செய்தவர்களை தவிர புதிதாகமுறைப்பாடு செய்வதற்கும் பலர் வருகை தந்திருந்தனர். அந்த முறைப்பாடுகளையும் நாம் விசாரித்தோம்.
மேலும் புதிதாக முறைப்பாடுகளை செய்தவர்களுக்கு பிறிதொரு தினத்தை ஒதுக்கு வதாக நாம் தெரிவித்தோம். இதனை விசாரிப்பதற்கு அதிகாரம் இருந்தபோதிலும் தண்டனை வழங்கும் அதிகாரம் எமக்கு இல்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எம்மால் முடியாது எமது அறிக்கையின் ஊடாக ஜனாதிபதியிடம் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும். தேவையான ஆலோசனைகளை வழங்கும் அதிகாரம் எமக்குண்டு. தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை.”
No comments:
Post a Comment