Sunday 27 April 2014

புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சி: நெடியவனுக்கு சிவப்பு எச்சரிக்கை! - இணையத்தில் வெளியிட்டது இன்டர்போல்!

Sunday, April 27, 2014
நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கை விதித்துள்ளது. இலங்கையில்  புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன் மீது குற்றம் சுமத்தியுள்ளது. 

நெடியவனை கைது செய்வதற்கான உதவியை சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளதாக இலங்கை பொலிஸார் இம்மாத ஆரம்ப பகுதியில் அறிவித்திருந்தனர். இதற்கமைய நெடியவனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

நெடியவன் தொடர்பிலான சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் நெடியவனது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday 1 April 2014

புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பு!

Tuesday, April 01, 2014
இலங்கை::புலிகளுடன் தொடரப்புடையவை எனத் தெரிவித்து குறைந்த பட்சம் பதினைந்து சர்வதேச அமைப்புக்களைப் பட்டியலிட்டு தடை செய்து இலங்கை அரசு வர்த்தமானியில் அறிவித்திருக்கின்றது

புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று பட்டியல்படுத்தி தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேரணை வெற்றிபெற்ற நிலையில்,  இந்த தீவிர நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்தப் பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.
இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும்
புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;, கத்தோலிக்க அருட்தந்தை. இமானுவேலின் உலகத் தமிழர் பேரவை, நெடியவனின் புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்;கும்.
இந்த முழு விபரங்கள அடங்கிய  அறிவிப்பு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசினால் இந்த வாரம் வெளியிடப்படும் என தெரிய வருகிறது.

புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன. இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.
முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:

1.    நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2.    கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3.    விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4.  விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடைசெய்யப்படவுள்ள அமைப்புக்கள்.
1. தமிழீழ விடுதலை புலிகள் LTTE
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் .
3. தமிழர் ஒருங்கிணைப்பு குழு
4. பிரித்தானிய தமிழர் பேரவை - BTF
5. உலக தமிழர் இயக்கம்
6. கனேடிய தழிழ் காங்கிரஸ்
7. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
8. உலக தமிழ் மன்றம்
9. கனேடிய தமிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தமிழ் பேரவை
11. தமிழ் இளைஞர் அமைப்பு
12. உலக தமிழர் ஒருங்கமைப்பு குழு
13. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14. தமிழீழ மக்கள் கூட்டம்
15. உலக தமிழ் நிவாரண நிதியம்
16. தலைமை காரியாலய குழு
ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.
 
Thak you - Courtesy : poonththalir.blogspot.com

வீட்டுத்தொகுதிகளின் நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரினால் மேற்பார்வை!

 Tuesday, April 01, 2014
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (மார்.28) கொழும்பு பிரதேசத்தில் நிறைவுறும் தறுவாயிலுள்ள வீட்டுத் தொகுதியின் பணிகளை மேற்பார்வை செய்தார்.

இம் மேற்பார்வை விஜயத்தின் போது எதிரிசிங்க மாவத, சிரில் சீ பெரேரா மாவத மற்றும் போகஸன் வீதி வீடமைப்புத் திட்டங்களை செயலாளர் மேற்பார்வை செய்தார்.

இவ்வீட்டுத் திட்டமானது பாதுகாப்பு செயலாளரின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டலின் கீழும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வீட்டுத் திட்டமானது குறைந்த வசதிகளுடன் வாழும் சேரிப்புற மக்களுக்கு வழங்கப்படுவதோடு கொழும்பை சேறிப்புறமற்ற நகரமாக மாற்றும் அரசின் வாக்குறுதிக்கமைய இவை முன்னெடுத்துச் செல்லப்படுவது சிறப்பம்சமாகும்.

தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவளிக்கத் தயாரில்லை - ஃபொன்சேகா!

Tuesday, April 01, 2014
 பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மிகவும் பொருத்தமான ஒருவரை தேர்தலில் போட்டியிடச் செய்ய எதிர்க்கட்சிகள் முனைப்பு எடுத்தால், ஜனநாயகக் கட்சி முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவளிக்கத் தயாரில்லை எனவும் அவர், பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்தலில் ஈட்டியுள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.