Sunday 19 January 2014

ஊர்காவற்துறைப் பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு!

Sunday, January 19, 2014
ஊர்காவற்துறைப் பகுதியில் பற்றைக் காணியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையைச் சேர்ந்த அன்டன் ஜஸ்டின் (வயது 19) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
 
குறித்த இளைஞன் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக கடந்த 14ம் தேதி ஊர்காவற்றுறை பொலிசில் முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment