Saturday, March 22, 2014
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சொந்த நாட்டின் தைரியமான பிரஜைகளுக்கு எதிராக தண்டனை விதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்கும் சொந்தப் பிரஜைகள் ஒடுக்கப்படுகின்ற வகையிலான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அழுத்தங்கள் உக்கிரமடைந்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜேன் பாஸ்கீ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சொந்த நாட்டின் தைரியமான பிரஜைகளுக்கு எதிராக தண்டனை விதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்கும் சொந்தப் பிரஜைகள் ஒடுக்கப்படுகின்ற வகையிலான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அழுத்தங்கள் உக்கிரமடைந்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜேன் பாஸ்கீ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment