Monday 24 March 2014

மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் - ஜனாதிபதி!

Monday, March 24, 2014
 மாகாணசபைத் தோதல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 29ம் திகதி மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு நாட்டின் வாக்காளர்கள் பதிலடி கொடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியை அமோக வெற்றியடையச் செய்வதன் மூலம், சர்வதேச சமூகத்திற்கு வலுவான ஓர் செய்தியை சொல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஆதரவு யாருக்கு காணப்படுகின்றது என்பதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரானதல்ல எனவும், பயங்கரவாதிகளுக்கு எதிரானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் மூலம்; ஈட்ட முடியாத வெற்றியை சர்வதேச சமூகத்தின் ஊடாக ஈட்டிக்கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment