Sunday 23 March 2014

யஸ்மின் சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம!

Sunday, March 23, 2014
தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின்  சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை எந்தளவானது என்பதை புடம்போட்டு காட்டுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தோனேசியாவின் தருஸ்மான் தலைமையிலான நிபுணத்துவ குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.
இந்தக் குழுவில் சட்டத்தரணி யஷ்மின் சூகாவும் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் பிரித்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த அறிக்கை பக்கச்சார்பானது என்றும், இதில் நேர்மையான தரவுகள் காண்பிக்கப்படவில்லை என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
எனவே இதேபோன்றுதான் தருஸ்மான் அறிக்கையும் நேர்மையற்றதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment