தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூன்று பேரை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு நீதிமன்றம் குறித்த மூவரையும்
விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இரண்டு மகள்களையும்
இராணுவத்தில் இணைக்க விரும்பிய தந்தையை மூ தாக்க முற்பட்டதாகவும்
அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தில் சேர்வதற்கு மகள்களுக்கு அனுமதி வழங்கிய தந்தையை குறித்த மூன்று பேரும் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியொருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.
இராணுவத்தில் சேர்வதற்கு மகள்களுக்கு அனுமதி வழங்கிய தந்தையை குறித்த மூன்று பேரும் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியொருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment