Monday, March 24, 2014
சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் இலங்கையை புரிந்து கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே இலங்கை அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் சமரசிங்க, ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நாடு அடைந்துள்ள அபிவிருத்திகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு வெற்றிகரமாக விளக்கம் அளிக்க முடிந்துள்ளமையே இந்த பிளவிற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநேகமான நாடுகள் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment