Tuesday 1 April 2014

புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பு!

Tuesday, April 01, 2014
இலங்கை::புலிகளுடன் தொடரப்புடையவை எனத் தெரிவித்து குறைந்த பட்சம் பதினைந்து சர்வதேச அமைப்புக்களைப் பட்டியலிட்டு தடை செய்து இலங்கை அரசு வர்த்தமானியில் அறிவித்திருக்கின்றது

புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று பட்டியல்படுத்தி தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேரணை வெற்றிபெற்ற நிலையில்,  இந்த தீவிர நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்தப் பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.
இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும்
புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;, கத்தோலிக்க அருட்தந்தை. இமானுவேலின் உலகத் தமிழர் பேரவை, நெடியவனின் புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்;கும்.
இந்த முழு விபரங்கள அடங்கிய  அறிவிப்பு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசினால் இந்த வாரம் வெளியிடப்படும் என தெரிய வருகிறது.

புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன. இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.
முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:

1.    நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2.    கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3.    விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4.  விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடைசெய்யப்படவுள்ள அமைப்புக்கள்.
1. தமிழீழ விடுதலை புலிகள் LTTE
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் .
3. தமிழர் ஒருங்கிணைப்பு குழு
4. பிரித்தானிய தமிழர் பேரவை - BTF
5. உலக தமிழர் இயக்கம்
6. கனேடிய தழிழ் காங்கிரஸ்
7. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
8. உலக தமிழ் மன்றம்
9. கனேடிய தமிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தமிழ் பேரவை
11. தமிழ் இளைஞர் அமைப்பு
12. உலக தமிழர் ஒருங்கமைப்பு குழு
13. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14. தமிழீழ மக்கள் கூட்டம்
15. உலக தமிழ் நிவாரண நிதியம்
16. தலைமை காரியாலய குழு
ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.
 
Thak you - Courtesy : poonththalir.blogspot.com

No comments:

Post a Comment